Sunday, January 24, 2010

ஆறாத வலி!

உயிர் கொடுத்த
உன் நினைவுகளும்
உயிர் வலிக்கும் பிரிவுகளுமாய்
என்னுள்
புதையுண்டு கிடக்கின்றன!


அடுக்கடுக்காய் மனச் சுமையை
அடிக்கடி நீ தந்தாய்
ஆண்டு பல சென்றாலும்
ஆறிடுமா இந்த வலி…?

ம்…
ஆண்டொன்று போய்
புதிய ஆண்டுகள்
பல பிறந்தாலும்
ஆழமாய்ப் பதிந்த வடு ஆறிடுமா…?

ம்கூம்…
ஆறாது ஆறாது
ஒரு போதும் ஆறாது!

No comments:

Post a Comment