Thursday, January 28, 2010

அன்றைய நினைவு தேனாய் இனிக்கின்றது இன்றைய நிஜம் அனலாய் சுடுகின்றதே......

வலிக்கின்றது
உயிரைக் கேடயமாக்கி
கண்ணைக் காக்கும் இமை
போல் இரவு பகலாய் என்னை
அரவணைத்தாய் காற்றுக் கூட
என்னைத் தீண்டாமல்....

ஊமையானாய் வார்த்தைகளை
மெளனமாக்கி எனக்காக
கண்ணிமைகளை சாமரமாக்கி
எனக்கு வியர்க்காது வீசினாய்....

வெயில் என்னைத் தீண்டா
வண்னம் கரங்களைக்
குடையாக்கினாய்....

இருக்கையாக்கினாய் உன்
கால்களை எனக்கு
உன்னை எனக்கு உயிராக்கினாய்

நிலம் போல் தாங்கினாய்
நிலவு போல் குளிர்வித்தாய்
வைரம் போல் ஜொலிக்க
வைத்தாய்....
ஆக்கினாய் வாழ்வை பசுமையாய்

எனக்காக எனக்காக எல்லாமே
எனக்காக நான் சிரித்தால் நீயும்
சிரித்தாய் அழுதால் நீயும் அழுதாய்
நான் துடித்தால் நீயும் துடித்தாய்
என் கண்ணில் தூசு விழுந்தால்
உன் கண்கள் கண்ணீர் வடித்தது

என் செயலே உன் செயலாய்
என் உருவமே உன் உருவமாய்
எனக்காக எல்லாம் செய்தாய்
ஆனால் செய்யாமல் விட்டு
விட்டாயே என்னை திருமணம்....

உன் நினைவை வாழ்வாக்கி
கனவை துணையாக்கி விட்டு
கரம் மாறி கைப்பிடித்து சென்று
விட்டாயே....

அன்றைய நினைவு தேனாய்
இனிக்கின்றது
இன்றைய நிஜம் அனலாய்
சுடுகின்றதே......

No comments:

Post a Comment